Friday, March 11, 2011
Monday, July 14, 2008
காதல் வந்தால்

இணை புரியாத இன்பம் மனதில் !
உணர்ச்சியின் ஊற்று உடலில் !
உணர்ச்சியின் ஊற்று உடலில் !
தொலைபேசி துணை பேசும் !!
கணவு நீ உண்னும் உணவு
அவள் முகம் நீ பார்க்கும் கண்ணாடி
அவள் குரல் மழை சாரல்
அவள் பேச்சு உனக்கு மின்சார பாய்ச்சு
இசை பிடிக்கும்
தசையும் பிடிக்கும்
கவிதை பிடிக்கும்
காரம் இனிக்கும்
இனிப்பு கசக்கும்
அவள் அருகில் இருந்தால்
இதுதான் காதல் !!!!
Friday, July 4, 2008
தமிழின் நிலை

தாயை பிணமாக்குகிறான் "Mummy" என்று ஆங்கிலத்தால்
தாய் தமிழை வெறுக்கின்றான் ஆங்கிலத்தின் மோகத்தால்
காலை காபி "cafe" ஆகிறது
மாலை "Doosai" பிட்சாவாகிறது
காதல் - "DATING" ஆகிறது !!!
கற்பு - கானாமல்போகிறது !!
தமிழ் திருஓட்டை ஏந்துகிறது
தமிழன் அடிமைப்படுகிறான் !
ஊ வே சா வளர்த்த !
வள்ளுவன் வளப்படுத்திய !
பாரதி பரப்பிவைத்த !
வாஞ்சை குறைய நஞ்சை இந்த தமிழ் விசை !!!
இதை அழிக்க அல்ல அழிக்க நினைத்தாலும் !
அழிவு நினைபவனுக்கு !!!!!
ஈமைலில் என் இனியாள் :)

கடல் கடந்து கண்டம் விட்டு சென்றாய் !!
வலியோடு வழியனுப்பி நின்றேன்
சௌக்கியமா கண்ணே ! சிட்னியில் ???
சிறிதாய் ஈமைலில் சினுன்கினேன் !
இனையதளத்தில் இன்பம் இசைந்தாய் !!
இரண்டு பக்க ஈமைல் இறைத்தாய் !
பிறந்த போதில்லை !
படித்த போதில்லை !
பட்டம் வாங்கிய போதில்லை !
பரிசு பெற்ற போதில்லை !
அத்துணை இன்பம் உன் ஈமைலில்
இனியவள் நீயே
என் இளையவள் நீயே
இலக்கியம் நீயே
நான் எழுதும் இலக்கணம் நீயே
இறுதி வரை நீயே
இந்த சுவாசம் இருக்கும் வரை நீயே
என் காதலியாக அல்ல
என்றுமே என் இனிய இதயமாக !!!!!
Subscribe to:
Posts (Atom)
